This is an old revision of the document!
ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கத்தின் வருங்கால செயல்திட்டங்கள்.(கோவை)
சங்கம் என்ற அமைப்பு ஏன் எதற்காக என்ற கேள்விகள் பல கோணங்களில்எழுந்துள்ளன.சங்கத்தின் முதல் நோக்கம் நமது சமூக மக்கள் ஒருங்கிணைத்து நமக்கு முன் இருக்கும்சங்கத்தினையும், இனிமேல் தோன்றவிருக்கும் சங்கங்களையும் இணைத்து அதன் மூலமாக நம்முடைய சமூகத்தை எல்லாவிதத்திலும் மிக பலம்வாய்ந்த சமூகமாக மாற்றவேண்டும். இதற்காகவே இந்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சங்கத்தினுடைய தற்போதைய செயல்திட்டங்கள்
1. தமிழகம் முழுவதும் உள்ள நமது சங்கங்களை ஒருங்கிணைத்து,இல்லாதஇடங்களில் நமது கிளை சங்கங்களின் மூலமாக சமூக மக்களை ஒருங்கிணைத்து, விழாக்கள், தெருமுனை பிரச்சாரங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலமாக சமூக உணர்வை அதிகரிப்பது.
2. நமது மற்ற சமூக அமைப்புகளிடம் இணைந்து மக்களுக்கு பணியாற்றி ஒற்றுமை வளர்ப்பது.
3. அரசாங்கத்திடம் உரிமை கோரும் போராட்டங்களில் நமது அனைத்து சங்கங்களையும் இணைத்து பெரும்பான்மை பலத்தை அரசுக்கு காட்டுவது.
4. அரசு அளிக்கும் உதவிகளை ஒன்று விடாமல்நமது சமூக மக்களுக்கு பெற்று தருவது.
5. நமது சமூகத்திற்கென வர்த்தக அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக வர்த்தக பரிமாற்ற முறையில் சமூக பொருளாதாரத்தை உயர்த்துவது.
6. கோவையில் நமது சமூக கூடம் நமக்கென்று முதியோர் இல்லத்தை
நிறுவுவது.
7. திருமண தகவல்களை பரிமாற்றங்கள் மூலம் சமூக மக்களுக்கு உதவுவது.
8. விதவை பெண்களுக்கான மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுத்தல்.
9. சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு , வருடம் ஒரு முறை உதவி தொகை அளித்தல்.
10. ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை அளித்தல்.
11. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு தகுந்த நேரங்களில் சங்கம் மூலம் உதவி செய்தல்.
12. தமிழ்நாட்டில் வேட்டுவர்களின் புராதன கோயிலான தலையூர் காளிதேவிக்கு விரைவில் ஆலயம் அமைக்க மக்களை ஒன்று திரட்டி முன் நின்று வேலையை செய்து முடித்தல்.
ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கம்
அரசு பதிவு எண் : 247/ 2010 அலுவலகம்: 126/413 , மருதமலை மெயின்ரோடு,
P.N. புதூர், கோவை – 641 041 தமிழ்நாடு
